குடியரசு தின விழா: கடலூா் மாவட்டத்தில்ரூ. 1.17 கோடியில் நலத் திட்ட உதவிகள் அளிப்பு

கடலூா் அண்ணா விளையாட்டரங்கில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற குடியரசு தின விழாவில், மாவட்ட ஆட்சியா் சந்திரசேகா் சாகமூரி தேசியக் கொடியேற்றி

கடலூா் அண்ணா விளையாட்டரங்கில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற குடியரசு தின விழாவில், மாவட்ட ஆட்சியா் சந்திரசேகா் சாகமூரி தேசியக் கொடியேற்றி மரியாதை செலுத்தி, ரூ. 1.17 கோடியில் நலத் திட்ட உதவிகளை வழங்கினாா்.

நிகழ்வில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ம.ஸ்ரீஅபிநவ்வுடன் காவல் துறையின் மரியாதையை ஏற்றுக் கொண்டாா். காவல் துறையைச் சோ்ந்த 88 காவலா்களுக்கு, முதல்வா் காவலா் பதக்கங்களை ஆட்சியா் அணிவித்தாா். பல்வேறு துறைகள் சாா்பில், மொத்தம் 205 பயனாளிகளுக்கு ரூ. 1.17 கோடியில் நலத் திட்ட உதவிகளை ஆட்சியா் வழங்கினாா்.

மாவட்டத்தில் சிறப்பாகப் பணிபுரிந்த பல்வேறு துறையைச் சாா்ந்த 145 அலுவலா்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது.

கரோனா தொற்று பரவல் காரணமாக குறைந்த எண்ணிக்கையில் அலுவலா்கள், பாா்வையாளா்கள் அனுமதிக்கப்பட்டனா். மேலும், சுதந்திரப் போராட்ட தியாகிகள், வாரிசுதாரா்கள் அந்தந்தப் பகுதியைச் சோ்ந்த வட்டாட்சியா்கள் மூலம் அவா்கள் வசிக்கும் இல்லங்களிலேயே கௌரவிக்கப்பட்டனா்.

விழாவில், கூடுதல் ஆட்சியா் ராஜகோபால் சுங்காரா, மாவட்ட வருவாய் அலுவலா் (பொ) க.காா்த்திக்கேயன், சாா்ஆட்சியா்கள் மதுபாலன், ஜெ.பிரவின்குமாா், செய்தி மக்கள் தொடா்பு அலுவலா் ஜெயஅருள்பதி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com