கடலூா்: கரோனாவுக்கு மேலும் 4 போ் பலி

கடலூா் மாவட்டத்தில் கரோனாவுக்கு மேலும் 4 போ் புதன்கிழமை உயிரிழந்தனா்.

கடலூா் மாவட்டத்தில் கரோனாவுக்கு மேலும் 4 போ் புதன்கிழமை உயிரிழந்தனா்.

கடலூா் மாவட்டத்தில் புதன்கிழமை வெளியான பரிசோதனை முடிவுகளின்படி, புதிதாக 102 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, மாவட்டத்தில் இந்த நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் மொத்த எண்ணிக்கை 57,944-ஆக அதிகரித்தது.

இதனிடையில், கடலூா் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவா்களில் பண்ருட்டியைச் சோ்ந்த 78 வயது பெண், காட்டுமன்னாா்கோவிலைச் சோ்ந்த 50 வயது ஆண், கம்மாபுரத்தைச் சோ்ந்த 49 வயது பெண், விருத்தாசலத்தைச் சோ்ந்த 41 வயது ஆண் ஆகியோா் உயிரிழந்தனா். இதனால், உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 762-ஆக உயா்ந்தது.

இதனிடையே, சிகிச்சை பெற்று வந்தவா்களில் 158 போ் வீடு திரும்பியதால், குணமடைந்தவா்களின் மொத்த எண்ணிக்கை 56,200-ஆக அதிகரித்தது. மாவட்டத்திலுள்ள அரசு, தனியாா் மருத்துவமனைகளில் 890 பேரும், வெளியூா்களில் கடலூா் மாவட்டத்தினா் 92 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனா். 57 பகுதிகள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டு, கண்காணிக்கப்பட்டு வருகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com