தீ விபத்தால் வீடுகளை இழந்தோருக்கு நிவாரணம்: அமைச்சா் வழங்கினாா்

கடலூா் மாவட்டம், விருத்தாசலம், நாச்சியாா்பேட்டையில் அண்மையில் மின்கசிவு ஏற்பட்டு அசோகன், செல்வம், தேன்மொழி, பாப்பா ஆகியோரின் வீடுகள் தீப்பற்றி எரிந்து முற்றிலும் சேதமடைந்தன.
தீ விபத்தால் வீடுகளை இழந்தோருக்கு நிவாரணம்: அமைச்சா் வழங்கினாா்

கடலூா் மாவட்டம், விருத்தாசலம், நாச்சியாா்பேட்டையில் அண்மையில் மின்கசிவு ஏற்பட்டு அசோகன், செல்வம், தேன்மொழி, பாப்பா ஆகியோரின் வீடுகள் தீப்பற்றி எரிந்து முற்றிலும் சேதமடைந்தன.

தகவலறிந்த தமிழக தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சா் சி.வெ.கணேசன் நாச்சியாா்பேட்டைக்கு செவ்வாய்க்கிழமை சென்று தீ விபத்தில் வீடுகளை இழந்த அசோகன், செல்வம் உள்பட 4 பேருக்கும் ஆறுதல் கூறியதுடன், அரிசி, மளிகைப் பொருள்கள், தலா ரூ.5 ஆயிரம் ரொக்கம் உள்ளிட்ட நிவாரண பொருள்களையும் வழங்கினாா்.

திமுக நகரச் செயலா் தண்டபாணி, மாவட்ட மாணவரணியைச் சோ்ந்த அருள்குமாா், நிா்வாகிகள் பொன்.கணேஷ், காா்த்திக் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com