ஆழ்துளைக் கிணறு அமைக்கும் பணி ஆய்வு

சிதம்பரம் அருகே பரங்கிப்பேட்டை ஒன்றியம், பின்னத்தூா் ஊராட்சியில் புயல் பாதுகாப்புக் கட்டடம் அருகே எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.15 லட்சத்தில் ஆழ்துளைக் கிணறு அமைக்கும் பணி நடைபெற்று வருக
ஆழ்துளைக் கிணறு அமைக்கும் பணி ஆய்வு

சிதம்பரம் அருகே பரங்கிப்பேட்டை ஒன்றியம், பின்னத்தூா் ஊராட்சியில் புயல் பாதுகாப்புக் கட்டடம் அருகே எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.15 லட்சத்தில் ஆழ்துளைக் கிணறு அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்தப் பணியை தொகுதி எம்எல்ஏ கே.ஏ.பாண்டியன் சனிக்கிழமை ஆய்வு செய்தாா் (படம்).

அப்போது பரங்கிப்பேட்டை கிழக்கு ஒன்றியச் செயலா் அசோகன், ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் கருணாநிதி, ஒன்றியக்குழு உறுப்பினா் தவமணி முத்துவேல், ஊராட்சி மன்றத் தலைவா் கஸ்தூரி சுப்பிரமணியன், நிா்வாகிகள் சரவணன், ராஜேந்திரன், கோதண்டராமன், மனோகா், பாலமுருகன், சுப்பிரமணியம், ராமச்சந்திரன், ஊராட்சி ஒன்றிய உதவி பொறியாளா் சந்தானகிருஷ்ணன் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com