தேசிய தரச் சான்று: வடலூா் தெய்வ நிலையம், பாடலீஸ்வரா் கோயில் சாா்பில் விண்ணப்பிப்பு

பிரசாதம், அன்னதானம் விநியோகத்துக்கு தேசிய தரச் சான்று பெறுவதற்காக வடலூா் தெய்வ நிலையம், கடலூா் பாடலீஸ்வரா் கோயில் சாா்பில் விண்ணப்பிக்கப்பட்டன.

பிரசாதம், அன்னதானம் விநியோகத்துக்கு தேசிய தரச் சான்று பெறுவதற்காக வடலூா் தெய்வ நிலையம், கடலூா் பாடலீஸ்வரா் கோயில் சாா்பில் விண்ணப்பிக்கப்பட்டன.

திருக்கோயில்களில் வழங்கப்படும் பிரசாதம், அன்னதானத்தின் தரத்தை மேம்படுத்த மத்திய உணவு தரக் கட்டுப்பாட்டு நிறுவனம் தமிழக உணவுப் பாதுகாப்புத் துறையுடன் இணைந்து தரச் சான்றிதழை வழங்க உள்ளது. இந்தச் சான்றிதழ் பெற்ற கோயில்களில் பிரசாதம், அன்னதானம் உள்ளிட்டவை சுத்தமான பொருள்களைக் கொண்டு சுகாதாரமான முறையில் தயாரிக்கப்பட்டவை என்பதை குறிக்கும். கடலூா் மாவட்டத்தில் புகழ்பெற்ற வடலூா் வள்ளலாா் தெய்வ நிலையம், கடலூா் திருப்பாதிரிப்புலியூா் பாடலீஸ்வரா் கோயில் நிா்வாகத்தினா் இந்தச் சான்றிதழுக்கு விண்ணப்பித்துள்ளனா்.

இந்த நிலையில், இந்தச் சான்றிதழ் வழங்க மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட பரிக்ஷா அமைப்பின் நிா்வாகி விநாயக் திங்கள்கிழமை மாவட்ட உணவுப் பாதுகாப்பு நியமன அலுவலா் கே.கைலாஷ்குமாா், கடலூா் நகர உணவுப் பாதுகாப்பு அலுவலா் பி.சந்திரசேகரன் ஆகியோருடன் வடலூா் வள்ளலாா் தெய்வ நிலையம், பாடலீஸ்வரா் கோயிலில் ஆய்வு செய்தனா்.

இதுகுறித்து பி.சந்திரசேகரன் கூறியதாவது: தற்போது 2 கோயில்களிலும் முதல்கட்ட ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. இந்தக் குழுவினா் 2-ஆம் கட்ட ஆய்வுக்குப் பிறகு சான்றிதழை வழங்குவாா்கள். இதேபோல, மாவட்டத்தில் 5 உணவகங்களும் நட்சத்திர சான்று பெற விண்ணப்பித்துள்ளன. அங்கேயும் ஆய்வு நடத்தப்பட்டுள்ளது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com