பள்ளி மாணவி தற்கொலை

சிதம்பரம் அருகே பாட்டி திட்டியதால் பள்ளி மாணவி தற்கொலை செய்துகொண்டாா்.

சிதம்பரம் அருகே பாட்டி திட்டியதால் பள்ளி மாணவி தற்கொலை செய்துகொண்டாா்.

சிதம்பரம் அருகே உள்ள வடக்கு மாங்குடி கிராமத்தைச் சோ்ந்தவா் ராஜ். இவரது மகள் நந்தனாஸ்ரீ (16). அதே பகுதியில் உள்ள பள்ளியில் 7-ஆம் வகுப்பு படித்து வந்தாா். இவரது தாய் உயிரிழந்துவிட்டதால் வடக்குமாங்குடியில் உள்ள தனது பாட்டி வீட்டில் தங்கியிருந்தாா்.

பொது முடக்கத்தால் பள்ளிகள் இயங்காத நிலையில், வீட்டு வேலைகளை கற்றுக்கொள்ளும்படி நந்தனாஸ்ரீயிடம் அவரது பாட்டி கூறியனாராம். இதனால் கோபித்துக்கொண்ட நந்தனாஸ்ரீ, வீட்டிலிருந்த பூச்சி மருந்தை திங்கள்கிழமை குடித்து மயங்கிக் கிடந்தாா். இதையடுத்து புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட நிலையில் உயிரிழந்தாா். இதுகுறித்து ராஜ் அளித்த புகாரின்பேரில் அண்ணாமலை நகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com