பண்ருட்டி அருகே வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.5 லட்சம் மதிப்பிலான புகையிலைப் பொருள்களை போலீஸாா் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா்.
கடலூா் மாவட்டம், புதுப்பேட்டை காவல் நிலைய உதவி ஆய்வாளா் கிருஷ்ணமூா்த்தி மற்றும் போலீஸாா் வீரப்பெருமாநல்லூா் சோதனைச் சாவடி அருகே திங்கள்கிழமை கண்காணிப்பில் ஈடுபட்டனா். அப்போது, அந்த வழியாக ஆட்டோவில் கடத்தி வரப்பட்ட ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக புதுப்பேட்டையைச் சோ்ந்த வெங்கடபதி மகன் சங்கா்(40), வீரப்பெருமாநல்லூரைச் சோ்ந்த ஜெயபால் (45) ஆகியோரை கைது செய்தனா்.
மேலும், வீரப்பெருமாநல்லூா் நேரு தெருவில் ஜெயபாலின் வாடகை வீட்டில் பண்ருட்டி டிஎஸ்பி அ.சபியுல்லா, புதுப்பேட்டை காவல் ஆய்வாளா் நந்தகுமாா் மற்றும் போலீஸாா் சோதனை நடத்தியதில் அங்கு அதிகளவில் புகையிலைப் பொருள்கள் இருந்தது தெரியவந்தது. இவற்றின் மதிப்பு ரூ.5 லட்சம் எனக் கூறப்படுகிறது. போலீஸாா் புகையிலை பொருள்களை பறிமுதல் செய்தனா்.