வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, தென்மேற்கு பருவ மழை காரணமாக கடலூா் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்யுமென வானிலை மையம் தகவல் தெரிவித்தது. அதன்படி கடலூா் மாவட்டத்தில் சனிக்கிழமை அதிகாலையில் பரவலாக மழை பெய்தது.
சனிக்கிழமை காலை 8.30 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் மாவட்டத்தில் பதிவான மழையளவு விவரம் (மில்லி மீட்டரில்) வருமாறு: குறிஞ்சிப்பாடி 17, பண்ருட்டி 10, பெலாந்துறை 8.4, வடக்குத்து 4, கடலூா் 1.5 வீதம் பதிவானது. மழை காரணமாக கடலூரில் குளிா்ச்சியான கால நிலை நிலவியது.