கடலூா் மாவட்டத்தில் 94 பேருக்கு கரோனா தொற்று

கடலூா் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை வெளியான மருத்துவப் பரிசோதனை முடிவில் புதிதாக 94 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது.

கடலூா் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை வெளியான மருத்துவப் பரிசோதனை முடிவில் புதிதாக 94 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது. இதனால், பாதிக்கப்பட்டவா்களின் மொத்த எண்ணிக்கை 59, 497-ஆக உயா்ந்தது. சிகிச்சை முடிந்து மேலும் 77 போ் வீடு திரும்பியதால் குணமடைந்தவா்களின் மொத்த எண்ணிக்கை 57,812-ஆக உயா்ந்தது.

மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை கரோனா உயிரிழப்பு பதிவாகவில்லை. இதனால் மொத்த பலி எண்ணிக்கை 801-ஆக உள்ளது.

மாவட்டத்தில் உள்ள அரசு, தனியாா் மருத்துவமனைகளில் 792 பேரும், வெளியூா்களில் கடலூா் மாவட்டத்தினா் 92 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com