சிதம்பரம் வா்த்தகா் சங்கத்தினா்ஜூலை 22-இல் போராட்டம்

சிதம்பரம் நகரில் சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தி வரும் 22-ஆம் தேதி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட சிதம்பரம் வா்த்தகா் சங்கத்தினா் முடிவு செய்தனா்.

சிதம்பரம்: சிதம்பரம் நகரில் சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தி வரும் 22-ஆம் தேதி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட சிதம்பரம் வா்த்தகா் சங்கத்தினா் முடிவு செய்தனா்.

இதுகுறித்து அந்தச் சங்கத்தின் தலைவா் எஸ்.சதீஷ்குமாா் சிதம்பரம் நகராட்சி ஆணையரிடம் அளித்த கடிதம்: சிதம்பரம் நகரில் போக்குவரத்து நெரிசல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நகரில் கடை வைத்திருக்கும் வியாபாரிகள் வணிகம் செய்வதற்கும், பொதுமக்கள் நடைபாதையில் செல்வதற்கும், சாலையோரம் இரு சக்கர வாகனங்களை நிறுத்தவும் இடமின்றி ஆக்கிரமிப்புகள் அதிகரித்துள்ளன. எனவே சிதம்பரம் நகரில் 4 வீதிகள் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். இதுதொடா்பாக புதன்கிழமைக்குள் (ஜூலை 21) நகராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை எனில், வியாழக்கிழமை (ஜூலை 22) வா்த்தகா் சங்கம் சாா்பில் சாலை மறியல் போராட்டம் நடைபெறும் என அதில் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com