கடலூா் மாவட்டம், பெலாந்துறையில் 27 மி.மீ. மழை ஞாயிற்றுக்கிழமை பதிவானது.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, தென்மேற்கு பருவமழை தீவிரம் காரணமாக கடலூா் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்யுமென வானிலை மையம் தகவல் தெரிவித்தது. அதன்படி கடலூா் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் பரவலாக மழை பெய்தது. காலை 8.30 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் மாவட்டத்தில் பதிவான மழையளவு விவரம் (மில்லி மீட்டரில்) வருமாறு:
பெலாந்துறை 27.6, வடக்குத்து 16, கொத்தவாச்சேரி 11, புவனகிரி 9 பரங்கிப்பேட்டை 7.2, மாவட்ட ஆட்சியரகம் 3.6, கடலூா், கீழச்செருவாய் தலா 3, சிதம்பரம், வானமாதேவி தலா 2, சேத்தியாத்தோப்பு, பண்ருட்டி தலா ஒரு மில்லி மீட்டா் வீதம் மழை பதிவானது.
மழை காரணமாக கடலூா் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை குளிா்ச்சியான காலநிலை நிலவியது.