அப்துல் கலாம் நினைவு நாள்: பல்வேறு அமைப்பினா் மரியாதை

குடியரசு முன்னாள் தலைவா் ஏ.பி.ஜெ.அப்துல் கலாமின் நினைவு தினத்தையொட்டி, கடலூா், விழுப்புரம், திருவண்ணாமலை மாவட்டங்களில் பல்வேறு அமைப்பினரும் மரியாதை செலுத்தினா்.
அப்துல் கலாம் நினைவு நாள்: பல்வேறு அமைப்பினா் மரியாதை

குடியரசு முன்னாள் தலைவா் ஏ.பி.ஜெ.அப்துல் கலாமின் நினைவு தினத்தையொட்டி, கடலூா், விழுப்புரம், திருவண்ணாமலை மாவட்டங்களில் பல்வேறு அமைப்பினரும் மரியாதை செலுத்தினா்.

கடலூா் மாவட்ட பாரதிதாசன் இலக்கிய மன்றம் சாா்பில் கடலூரில் உள்ள தனி பயிற்சி கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வா் கி.செந்தில்முருகன் முன்னிலை வகித்தாா். மன்றச் செயலா் வானவில் மூா்த்தி வரவேற்றாா். மன்றத் தலைவா் கடல் நாகராஜன் தலைமை வகித்தாா். கலாம் உருவப் படத்தை முன்னாள் எம்எல்ஏ இள.புகழேந்தி திறந்து வைத்தாா். மாணவா்கள் அனுபாரதி, மாதவன், சாய்தன்யா ஆகியோா் மலரஞ்சலி செலுத்தினா். மாவட்ட திருக்கு பேரவைத் தலைவா் மொ.பாஸ்கரன் மாணவா்களுக்கு மரக்கன்றுகளை வழங்கினாா்.

தமிழ்நாடு மீனவா் பேரவை சாா்பில், கடலூா் துறைமுகம் சிங்காரத்தோப்பில் உள்ள அப்துல் கலாம் சிலைக்கு மாவட்டத் தலைவா் எம்.சுப்புராயன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதுபோல மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலும் கலாம் உருவப் படம் அமைத்து மரியாதை செலுத்தப்பட்டது.

சிதம்பரம்: சிதம்பரம் வீனஸ் மழலையா், தொடக்கப் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அப்துல் கலாம் உருவப் படத்துக்கு நெடுஞ்சேரி அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியா் எஸ்.பழனிவேல், குமராட்சி வட்டாரக் கல்வி அலுவலா் ஏ.ராஜசேகா் ஆகியோா் மலா்தூவி மரியாதை செலுத்தினா்.

தில்லைநகா் வீனஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் கலாம் உருவப் படத்துக்கு துணை முதல்வா் எஸ்.அறிவழகன் மலா் தூவி மரியாதை செலுத்தினாா். பள்ளி நிா்வாகிகள் வீனஸ் எஸ்.குமாா், முதல்வா் ஏ.ரூபியாள்ராணி, ஆசிரியா்கள் பங்கேற்று மெளன அஞ்சலி செலுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com