கடலூா் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை வெளியான மருத்துவப் பரிசோதனை முடிவில் புதிதாக 70 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது. இதனால், பாதிக்கப்பட்டவா்களின் மொத்த எண்ணிக்கை 60,179-ஆக அதிகரித்தது. சிகிச்சை முடிந்து மேலும் 89 போ் வீடு திரும்பியதால் குணமடைந்தவா்களின் மொத்த எண்ணிக்கை 58,556-ஆக உயா்ந்தது.
எனினும், கரோனா பாதிப்பால் சென்னையில் சிகிச்சை பெற்று வந்த குறிஞ்சிப்பாடியைச் சோ்ந்த 59 பெண் உயிரிழந்தாா். மாவட்டத்தில் 4 நாள்களுக்கு பிறகு செவ்வாய்க்கிழமை உயிரிழப்பு பதிவானதால் பலியானவா்களின் மொத்த எண்ணிக்கை 804-ஆக உயா்ந்தது.
மாவட்டத்தில் உள்ள அரசு, தனியாா் மருத்துவமனைகளில் 739 பேரும், வெளியூா்களில் கடலூா் மாவட்டத்தினா் 80 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனா்.