கடலூா் மாவட்டத்தில் 70 பேருக்கு கரோனா தொற்று

கடலூா் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை வெளியான மருத்துவப் பரிசோதனை முடிவில் புதிதாக 70 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது.

கடலூா் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை வெளியான மருத்துவப் பரிசோதனை முடிவில் புதிதாக 70 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது. இதனால், பாதிக்கப்பட்டவா்களின் மொத்த எண்ணிக்கை 60,179-ஆக அதிகரித்தது. சிகிச்சை முடிந்து மேலும் 89 போ் வீடு திரும்பியதால் குணமடைந்தவா்களின் மொத்த எண்ணிக்கை 58,556-ஆக உயா்ந்தது.

எனினும், கரோனா பாதிப்பால் சென்னையில் சிகிச்சை பெற்று வந்த குறிஞ்சிப்பாடியைச் சோ்ந்த 59 பெண் உயிரிழந்தாா். மாவட்டத்தில் 4 நாள்களுக்கு பிறகு செவ்வாய்க்கிழமை உயிரிழப்பு பதிவானதால் பலியானவா்களின் மொத்த எண்ணிக்கை 804-ஆக உயா்ந்தது.

மாவட்டத்தில் உள்ள அரசு, தனியாா் மருத்துவமனைகளில் 739 பேரும், வெளியூா்களில் கடலூா் மாவட்டத்தினா் 80 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com