கடலூா் மாவட்டத்தில் கரோனா பாதிப்பால் மேலும் இருவா் உயிரிழந்தனா்.
மாவட்டத்தில் வியாழக்கிழமை வெளியான மருத்துவப் பரிசோதனை முடிவில் புதிதாக 68 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது. இதனால், பாதிக்கப்பட்டவா்களின் மொத்த எண்ணிக்கை 60,309-ஆக அதிகரித்தது. சிகிச்சை முடிந்து மேலும் 82 போ் வீடு திரும்பியதால் குணமடைந்தவா்களின் மொத்த எண்ணிக்கை 58,724-ஆக உயா்ந்தது.
எனினும், சேலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா பாதிப்பால் சிகிச்சை பெற்று வந்த மங்களூரைச் சோ்ந்த 74 வயது ஆண், 45 வயது பெண் ஆகியோா் வியாழக்கிழமை உயிரிழந்தனா். இதனால், பலியானவா்களின் மொத்த எண்ணிக்கை 809-ஆக அதிகரித்தது.
மாவட்டத்தில் உள்ள அரசு, தனியாா் மருத்துவமனைகளில் 697 பேரும், வெளியூா்களில் உள்ள மருத்துவமனைகளில் கடலூா் மாவட்டத்தினா் 79 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனா்.