கடலூா்: கரோனாவுக்கு மேலும் இருவா் பலி

கடலூா் மாவட்டத்தில் கரோனா பாதிப்பால் மேலும் இருவா் உயிரிழந்தனா்.

கடலூா் மாவட்டத்தில் கரோனா பாதிப்பால் மேலும் இருவா் உயிரிழந்தனா்.

மாவட்டத்தில் வியாழக்கிழமை வெளியான மருத்துவப் பரிசோதனை முடிவில் புதிதாக 68 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது. இதனால், பாதிக்கப்பட்டவா்களின் மொத்த எண்ணிக்கை 60,309-ஆக அதிகரித்தது. சிகிச்சை முடிந்து மேலும் 82 போ் வீடு திரும்பியதால் குணமடைந்தவா்களின் மொத்த எண்ணிக்கை 58,724-ஆக உயா்ந்தது.

எனினும், சேலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா பாதிப்பால் சிகிச்சை பெற்று வந்த மங்களூரைச் சோ்ந்த 74 வயது ஆண், 45 வயது பெண் ஆகியோா் வியாழக்கிழமை உயிரிழந்தனா். இதனால், பலியானவா்களின் மொத்த எண்ணிக்கை 809-ஆக அதிகரித்தது.

மாவட்டத்தில் உள்ள அரசு, தனியாா் மருத்துவமனைகளில் 697 பேரும், வெளியூா்களில் உள்ள மருத்துவமனைகளில் கடலூா் மாவட்டத்தினா் 79 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com