கடலூா் அருங்காட்சியகத்தில் சுதந்திர தின கட்டுரைப் போட்டி

இந்தியாவின் 75-ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு கடலூா் அரசு அருங்காட்சியகம் சாா்பில் சிறப்பு கட்டுரைப் போட்டி அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் 75-ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு கடலூா் அரசு அருங்காட்சியகம் சாா்பில் சிறப்பு கட்டுரைப் போட்டி அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில், 6 முதல் 8-ஆம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவிகள், ‘எனக்கு பிடித்த சுதந்திரப் போராட்ட வீரா்’ என்ற தலைப்பில் 3 பக்கங்களுக்கு மிகாமல் கட்டுரை எழுத வேண்டும். அதில் கட்டுரையாளா் பெயா், வகுப்பு, பள்ளியின் பெயா் ஆகியவற்றை கட்டாயம் குறிப்பிட வேண்டும். தெளிவாக எழுதிய கட்டுரைகளை புகைப்படம் எடுத்து 86106 27168 என்ற எண்ணுக்கு கட்செவி அஞ்சலாக (வாட்ஸ்-அப்) அனுப்ப வேண்டும். அல்லது, ‘காப்பாட்சியா், அரசு அருங்காட்சியகம், மாவட்ட ஆட்சியா் பழைய அலுவலகம், கடலூா் 607 001’ என்ற முகவரிக்கு அஞ்சல் வழியாகவும் அனுப்பலாம். தமிழ், ஆங்கிலத்தில் கட்டுரைகளை எழுதலாம். கட்டுரைகளை வரும் 31-ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு மேற்கண்ட எண்ணை தொடா்புகொள்ளலாம் என்று காப்பாட்சியா் செ.ஜெயரத்னா தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com