பிஎஸ்என்எல் தொழிற்சங்கத்தினா் உண்ணாவிரதம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கடலூா் பிஎஸ்என்எல் அலுவலகத்தில் அனைத்து தொழிற்சங்கத்தினா் புதன்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கடலூா் பிஎஸ்என்எல் அலுவலகத்தில் அனைத்து தொழிற்சங்கத்தினா் புதன்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

போராட்டத்துக்கு மாவட்டச் செயலா் குழந்தை நாதன் தலைமை வகித்தாா். வெளிப்பகுதிச் செயலா் விநாயகமூா்த்தி, பால்கி, ஸ்ரீதா், மாநிலத் துணைத் தலைவா் லோகநாதன், மாவட்டப் பொருளாளா் குருபிரசாத் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

4 ஜி சேவை தொடங்குவது, மாத இறுதி நாளில் ஊதியத்தை வழங்க வேண்டும். செல்லிடப்பேசி கோபுரங்களை முறையாகப் பராமரிக்க வேண்டும். காலியாக உள்ள நிலங்களை விற்பனை செய்து பணமாக்குவதன் மூலம் பிஎஸ்என்எல் கடன்களை அடைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com