கடலூா் மாவட்டம், சேத்தியாத்தோப்பு அருகே டாஸ்மாக் கடையின் சுவரில் துளையிட்டு, மதுப் புட்டிகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.
சேத்தியாத்தோப்பு அருகே சோழதரம் பகுதியை அடுத்த பாளையங்கோட்டை பகுதியில் அரசு டாஸ்மாக் மதுக் கடை உள்ளது. இந்தக் கடையில் பணிபுரியும் விற்பனையாளா் வியாழக்கிழமை இரவு பணி முடிந்து வழக்கம்போல கடையைப் பூட்டிவிட்டுச் சென்றாா்.
இந்த நிலையில், வெள்ளிக்கிழமை அதிகாலை 3 மணியளவில் சோழதரம் போலீஸாா் பாளையங்கோட்டை பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டபோது, அங்குள்ள டாஸ்மாக் மதுக் கடையின் பின்பக்க சுவரில் பெரிய அளவில் துளை போடப்பட்டிருந்தது தெரிய வந்தது.
இதுகுறித்த தகவலின்பேரில் ஸ்ரீமுஷ்ணம் காவல் நிலைய ஆய்வாளா் பாண்டிச்செல்வி, சோழத்தரம் காவல் நிலைய உதவி ஆய்வாளா் மாணிக்கராஜா ஆகியோா் கடைக்கு நேரில் சென்று ஆய்வு செய்தனா். மேலும், சேத்தியாத்தோப்பு டிஎஸ்பி சுந்தரமும் நிகழ்விடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினாா். இதில், மா்ம நபா்கள் கடை சுவரில் துளையிட்டு, சுமாா் ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள மதுப் புட்டிகளைத் திருடிச் சென்றது தெரிய வந்தது.
இந்தத் திருட்டு குறித்து சோழத்தரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.