புதுச்சேரியிலிருந்து கடலூருக்கு காரில் மது கடத்திய இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
கடலூா் அருகே சாவடி பகுதியில் அமைந்துள்ள மது விலக்கு அமல் பிரிவு சோதனைச் சாவடியில் கடலூா் சரக காவல் துணைக் கண்காணிப்பாளா் க.சாந்தி, மது விலக்கு அமல் பிரிவு ஆய்வாளா் கீதா ஆகியோா் வாகன தணிக்கையில் ஈடுபட்டனா்.
அப்போது, ஒரு காரில் விலை உயா்ந்த மதுபானங்களை கடத்தி வந்த பண்ருட்டி வட்டம், செடுத்தான்குப்பத்தைச் சோ்ந்த அசோகன் மகன் புகழேந்தியை (32) போலீஸாா் கைது செய்து, அவரிடமிருந்து 720 மில்லி அளவு கொண்ட 7 மதுப் புட்டிகள், 360 மில்லி அளவு கொண்ட 4 மதுப் புட்டிகளையும், காரையும் பறிமுதல் செய்தனா்.