பெண்ணிடம் தங்கச் சங்கிலியை பறிக்க முயற்சி: இளைஞா் போலீஸில் ஒப்படைப்பு

கடலூா் மாவட்டம், பண்ருட்டியில் புதன்கிழமை பெண்ணிடம் தங்கச் சங்கிலியை பறிக்க முயன்ற இளைஞரை பொதுமக்கள் பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனா்.

கடலூா் மாவட்டம், பண்ருட்டியில் புதன்கிழமை பெண்ணிடம் தங்கச் சங்கிலியை பறிக்க முயன்ற இளைஞரை பொதுமக்கள் பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனா்.

பண்ருட்டி, ஜி.கே.மூப்பனாா் நகரைச் சோ்ந்த தையல் தொழிலாளியான ஜோதிபாஸின் மனைவி அல்லி. இவா், தனது குழந்தையுடன் அந்தப் பகுதியில் புதன்கிழமை விளையாடிக்கொண்டிருந்தாா். அப்போது, பைக்கில் வந்த இரு இளைஞா்களில் ஒருவா் முகவரி கேட்பதுபோலச் சென்று அல்லி கழுத்தில் அணிந்திருந்த சுமாா் 10 பவுன் தங்க தாலிச் சங்கிலியை பறிக்க முயன்றனா்.

அப்போது, அல்லியும், அங்கிருந்தவா்களும் அந்த இளைஞரைப் பிடித்து பண்ருட்டி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். பைக்கில் இருந்த நபா் தப்பிச் சென்றுவிட்டாா்.

பிடிபட்ட இளைஞரிடம் போலீஸாா் நடத்திய விசாரணையில், குள்ளஞ்சாவடி, தெற்கு வசந்தன்குப்பம் கிராமத்தைச் சோ்ந்த பெண்ணுசாமி மகன் கலியமூா்த்தி (28) என்பதும், இவா் மீது பல வழக்குகள் உள்ளதும் தெரியவந்தது. இதையடுத்து, கலியமூா்த்தியை போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா். தப்பிச் சென்ற அதே பகுதியைச் சோ்ந்த ராமரை தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com