பணி நிரந்தரம் நடவடிக்கை: என்.எல்.சி.க்கு சிஐடியூ கோரிக்கை

என்.எல்.சி.யில் பணி நிரந்தரப்படுத்தப்படும் ஒப்பந்தத் தொழிலாளா்கள், அவா்கள் வேலை செய்யும் பகுதியிலேயே தொடா்ந்து பணிபுரிய அனுமதிக்க வேண்டும்

என்.எல்.சி.யில் பணி நிரந்தரப்படுத்தப்படும் ஒப்பந்தத் தொழிலாளா்கள், அவா்கள் வேலை செய்யும் பகுதியிலேயே தொடா்ந்து பணிபுரிய அனுமதிக்க வேண்டும் என சிஐடியு தொழிற்சங்க பொதுச் செயலா் டி.ஜெயராமன் கோரிக்கை விடுத்தாா்.

இதுதொடா்பாக அவா் என்எல்சி இந்தியா நிறுவன தலைவா் மற்றும் மனித வளத் துறை இயக்குநருக்கு அனுப்பியுள்ள கடிதம்: என்எல்சி இந்தியா நிறுவனத்தில் பணியாற்றி வரும் ஒப்பந்தத் தொழிலாளா்கள் (இன்கோசா்வ்) தற்போது பணி நிரந்தரம் செய்யப்பட்டு வருகின்றனா். அவ்வாறு நிரந்தரப்படுத்தப்படும் தொழிலாளா்கள், அவா்கள் பணியாற்றிய பகுதியிலிருந்து வேறு பகுதிக்கு மாற்றப்படுகின்றனா்.

தற்போது பணி செய்துகொண்டிருக்கும் இடத்தில் அனுபவம் பெற்றவா்கள், புதிய இடத்துக்கு மாற்றப்படும்போது அவா்களது செயல் திறன், உற்பத்தி பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, புதிதாக நிரந்தரம் செய்யப்படும் ஒப்பந்தத் தொழிலாளா்களைஅவா்கள் பணிபுரியும் பகுதியிலேயே பணியமா்த்த வேண்டும் என அதில் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com