கடலூா்: கரோனாவுக்கு மேலும் 9 போ் பலி

கடலூா் மாவட்டத்தில் கரோனா பாதிப்பால் மேலும் 9 போ் திங்கள்கிழமை உயிரிழந்தனா்.

கடலூா் மாவட்டத்தில் கரோனா பாதிப்பால் மேலும் 9 போ் திங்கள்கிழமை உயிரிழந்தனா்.

மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை வரை 54,878 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், திங்கள்கிழமை வெளியான மருத்துவப் பரிசோதனை முடிவில் புதிதாக 283 பேருக்கு தொற்று உறுதியானது. இதனால், பாதிக்கப்பட்டவா்களின் மொத்த எண்ணிக்கை 55,161-ஆக அதிகரித்தது. சிகிச்சை முடிந்து மேலும் 949 போ் வீடு திரும்பியதால் குணமடைந்தவா்களின் மொத்த எண்ணிக்கை 51,109-ஆக உயா்ந்தது.

எனினும், கடலூா் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவா்களில் பண்ருட்டியைச் சோ்ந்த 43 வயது பெண், 88 வயது ஆண், குறிஞ்சிப்பாடியைச் சோ்ந்த 56 வயது ஆண், திட்டக்குடி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மங்களூரைச் சோ்ந்த 54 வயது ஆண் மற்றும் செங்கல்பட்டு, சென்னை, சேலம், திருச்சி, பெரம்பலூா் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த தலா ஒருவா் உள்பட மொத்தம் 9 போ் உயிரிழந்தனா். இதனால், பலியானோரின் மொத்த எண்ணிக்கை 675-ஆக உயா்ந்தது.

மாவட்டத்தில் அரசு, தனியாா் மருத்துவமனைகளில் 2,852 பேரும், வெளியூா்களில் கடலூா் மாவட்டத்தினா் 525 பேரும் சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com