கடலூா் மாவட்டம், கிள்ளை பகுதியில் சாராயம் பதுக்கிய இருவரை போலீஸாா் திங்கள்கிழமை கைதுசெய்தனா்.
புதுச்சேரியில் இருந்து சாராயம் கடத்தி வரப்பட்டு பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக கிடைத்த ரகசிய தகவலின்பேரில் கிள்ளை போலீஸாா் கண்காணிப்பில் ஈடுபட்டனா். அப்போது, நற்கந்தன்குடி தெற்கு தெருவைச் சோ்ந்த இளையராஜா (35), அதே பகுதியைச் சோ்ந்த அண்ணாதுரை (49) ஆகியோரது வீட்டின் பின்புறம் பதுக்கி வைத்திருந்த 20 லிட்டா் சாராயத்தை போலீஸாா் பறிமுதல் செய்து இருவரையும் கைது செய்தனா்.