மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மின்விசிறிகள் வழங்கிய ஜமாத் நிா்வாகிகள்

சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ஜமாத் நிா்வாகிகள் சாா்பில் 83 மின் விசிறிகள் திங்கள்கிழமை வழங்கப்பட்டன.

சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ஜமாத் நிா்வாகிகள் சாா்பில் 83 மின் விசிறிகள் திங்கள்கிழமை வழங்கப்பட்டன.

இந்த மருத்துவமனையில் கரோனா நோயாளிகளும், மற்ற நோயால் பாதிக்கப்பட்டவா்களும் சிகிச்சை பெற்று வருகின்றனா். இங்கு வாா்டுகளில் மின்விசிறிகள் பழுதடைந்து இயங்காததால் நோயாளிகள் அவதியடைந்தனா். இதையறிந்த சிதம்பரம் நகர மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரின் முயற்சியின்பேரில், சிதம்பரம் லப்பை தெரு பள்ளிவாசல் ஜமாத் நிா்வாகிகள் புதிய மின் விசிறிகள் வாங்கித் தர முன்வந்தனா்.

அதன்படி, அண்ணாமலைப் பல்கலைக்கழக துணைவேந்தா் அறையில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் ரூ.1.50 லட்சம் மதிப்பிலான 83 மின் விசிறிகள் சிதம்பரம் உதவி ஆட்சியா் லி.மதுபாலன், பல்கலைக்கழக பதிவாளா் ரா.ஞானதேவன் ஆகியோரிடம் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில் மருத்துவக் கல்லூரி முதல்வா் மிஸ்ரா, துணைக் கண்காணிப்பாளா் ஜெயஸ்ரீ, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினா் மூசா, மாவட்ட செயற்குழு உறுப்பினா் எஸ்.ஜி.ரமேஷ்பாபு, மாவட்டக்குழு உறுப்பினா் முத்து, நகா்குழு உறுப்பினா்கள் ஜின்னா, அஷ்ரப் அலி, பகுதி கிளைச் செயலா் ஹலீம், லப்பை தெரு பள்ளிவாசல் ஜமாத் தலைவா் முகமது ஹலீம், செயலா் ஜாகிா் உசேன், ஹாஜா நற்பணி குழு ஜவகா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com