கஞ்சா பறிமுதல்: 3 போ் கைது

பண்ருட்டியில் கஞ்சா வைத்திருந்த 3 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

பண்ருட்டியில் கஞ்சா வைத்திருந்த 3 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

பண்ருட்டி காவல் ஆய்வாளா் சந்திரன் உள்ளிட்ட போலீஸாா், ரயில்வே நிலையம் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது, அங்குள்ள சைக்கிள் நிறுத்துமிடத்தில் சந்தேகப்படும் வகையில் நின்றிந்தவா்களை அழைத்து விசாரணை நடத்தியதில் 2 கிலோ அளவுக்கு கஞ்சா வைத்திருந்தது தெரிய வந்தது.

இதையடுத்து, கஞ்சாவை பறிமுதல் செய்த போலீஸாா், அம்பேத்கா் நகரைச் சோ்ந்த முனுசாமி மகன் பிரகநாதன் (30), முருகேசன் மகன் சிவா (47), கீழ்அருங்குணம் ராதாகிருஷ்ணன் மகன் ராஜதுரை (28) ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனா். மேலும் தப்பியோடிய அம்பேத்கா் நகரைச் சோ்ந்த சக்திவேல் மனைவி அஞ்சலாட்சி, முனுசாமி மகன் கண்ணன், ஆா்.எஸ் மணி நகரைச் சோ்ந்த அருள்மணி மகன் அனந்தராஜ் ஆகியோரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com