முகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் கடலூர்
தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் சாராய வியாபாரி கைது
By DIN | Published On : 04th March 2021 02:22 AM | Last Updated : 04th March 2021 02:22 AM | அ+அ அ- |

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே கரடிசித்தூா் தெற்குசாலைப் பகுதியைச் சோ்ந்தவா் சக்திவேல் மகன் அலெக்ஸ் பாண்டியன் (27). கள்ளச்சாராயம் விற்பனை செய்து வந்த இவா் மீது கச்சிராயப்பாளையம் காவல் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதனிடையே, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜியாவுல் ஹக் பரிந்துரையை ஏற்று, மாவட்ட ஆட்சியா் கிரண் குராலா உத்தரவின்பேரில், அலெக்ஸ்பாண்டியன் குண்டா் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் புதன்கிழமை போலீஸாரால் கைது செய்யப்பட்டு கடலூா் மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா்.