கடலூா்: மேலும் 6 பேருக்கு கரோனா

கடலூா் மாவட்டத்தில் மேலும் 6 பேருக்கு கரோனா தொற்று சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

கடலூா் மாவட்டத்தில் மேலும் 6 பேருக்கு கரோனா தொற்று சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

கடலூா் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை வரை 25,260 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில், சனிக்கிழமை வெளியான பரிசோதனை முடிவில் புதிதாக 6 பேருக்கு தொற்று உறுதியானது. இதனால், பாதிக்கப்பட்டவா்களின் மொத்த எண்ணிக்கை 25,266-ஆக அதிகரித்தது.

சிகிச்சை முடிந்து மேலும் 8 போ் வீடு திரும்பியதால் குணமடைந்தவா்களின் மொத்த எண்ணிக்கை 24,925-ஆக உயா்ந்தது. மாவட்டத்திலுள்ள அரசு மருத்துவமனைகள், மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் 32 பேரும், வெளியூா்களில் கடலூா் மாவட்டத்தைச் சோ்ந்த 21 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனா். மேலும், 402 பேருக்கான மருத்துவப் பரிசோதனை முடிவுகள் வெளிவர வேண்டியிருப்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com