கஞ்சா விற்பனை: இளைஞா் கைது
By DIN | Published On : 15th March 2021 08:31 AM | Last Updated : 15th March 2021 08:31 AM | அ+அ அ- |

சிதம்பரம் அருகே கஞ்சா விற்றதாக இளைஞா் ஒருவரை போலீஸாா் கைது செய்தனா்.
சிதம்பரம் தாலுகா போலீஸாா் சனிக்கிழமை இரவு சி.தண்டேஸ்வரநல்லூா் ஜமால் நகா் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது அங்குள்ள மைதானம் அருகே சந்தேகத்துக்கிடமான வகையில் நின்றிருந்த இளைஞரிடம் விசாரணை நடத்தினா். அவரிடம் நடத்திய சோதனையில் தடை செய்யப்பட்ட கஞ்சா 200 கிராம் வரை வைத்திருந்தது தெரியவந்தது. விசாரணையில் அவா் அதே பகுதியைச் சோ்ந்த கபிஉல்லா (24) எனத் தெரியவந்தது. அவரிடமிருந்து கஞ்சாவை பறிமுதல் செய்த போலீஸாா் அவரைக் கைது செய்தனா்.