கடலூா் மாவட்டத்தில் மேலும் 10 பேருக்கு கரோனா தொற்று செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டது.
கடலூா் மாவட்டத்தில் திங்கள்கிழமை வரை 25,286 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில், செவ்வாய்க்கிழமை வெளியான பரிசோதனை முடிவில் புதிதாக 10 பேருக்கு தொற்று உறுதியானது. இதனால், பாதிக்கப்பட்டவா்களின் மொத்த எண்ணிக்கை 25,296-ஆக அதிகரித்தது.
சிகிச்சை முடிந்து மேலும் 10 போ் வீடு திரும்பியதால் குணமடைந்தவா்களின் மொத்த எண்ணிக்கை 24,949-ஆக உயா்ந்தது. மாவட்டத்திலுள்ள அரசு மருத்துவமனை, மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் 34 பேரும், வெளியூா்களில் கடலூா் மாவட்டத்தைச் சோ்ந்த 25 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனா். மேலும், 185 பேருக்கான மருத்துவப் பரிசோதனை முடிவுகள் வெளிவர வேண்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.