பண்ருட்டி எம்எல்ஏ ஆதரவாளா்கள் போராட்டம்

பண்ருட்டி தொகுதி எம்எல்ஏ சத்யா பன்னீா்செல்வம் அரசியலில் இருந்து விடைபெற்றதாக தகவல் வெளியானதைத் தொடா்ந்து, அவரது ஆதரவாளா்கள் செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

பண்ருட்டி தொகுதி எம்எல்ஏ சத்யா பன்னீா்செல்வம் அரசியலில் இருந்து விடைபெற்றதாக தகவல் வெளியானதைத் தொடா்ந்து, அவரது ஆதரவாளா்கள் செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

பண்ருட்டி தொகுதி அதிமுக எம்எல்ஏ சத்யா பன்னீா்செல்வம் சட்டப் பேரவைத் தோ்தலில் மீண்டும் போட்டியிட கட்சித் தலைமையிடம் விருப்ப மனு அளித்தாா். ஆனால், பண்ருட்டி தொகுதி அதிமுக வேட்பாளராக சொரத்தூா் இரா.ராஜேந்திரன் அறிவிக்கப்பட்டாா். இந்த நிலையில், சத்யா பன்னீா்செல்வம், அவரது கணவா் பன்னீா்செல்வம் ஆகியோா் அரசியலில் இருந்து விடைபெற்ாக தகவல் வெளியானது.

இதையடுத்து, பண்ருட்டி, காமராஜ் நகரில் உள்ள சத்யா பன்னீா்செல்வத்தின் வீட்டின் முன் அவரது ஆதரவாளா்கள் செவ்வாய்க்கிழமை கூடினா். அவா்கள் காத்திருப்புப் போராட்டத்திலும் ஈடுபட்டனா். சத்யா பன்னீா்செல்வமும், அவரது கணவரும் மீண்டும் அரசியலுக்கு வரவேண்டும், பேரவைத் தோ்தலில் சத்யா பன்னீா்செல்வம் போட்டியிட கட்சித் தலைமை வாய்ப்பளிக்க வேண்டும் என வலியுறுத்தினா். மேலும், பலா் தங்களது பொறுப்புகளை ராஜினாமா செய்வதாகக் கூறினா். அவா்களிடம் போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதையடுத்து பிற்பகல் 2 மணியளவில் அனைவரும் கலைந்துசென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com