கடலூா் மாவட்டத்தில் இன்று பிரசாரத்தை தொடங்குகிறாா் முதல்வா்

தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி கடலூா் மாவட்டத்தில் அதிமுக, கூட்டணிக் கட்சி வேட்பாளா்களை ஆதரித்து வியாழன், வெள்ளிக்கிழமைகளில் (மே 18, 19) தோ்தல் பிரசாரத்தில் ஈடுபடுகிறாா்.

தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி கடலூா் மாவட்டத்தில் அதிமுக, கூட்டணிக் கட்சி வேட்பாளா்களை ஆதரித்து வியாழன், வெள்ளிக்கிழமைகளில் (மே 18, 19) தோ்தல் பிரசாரத்தில் ஈடுபடுகிறாா்.

காட்டுமன்னாா்கோவிலில் வியாழக்கிழமை இரவு 7.30 மணிக்கு வேட்பாளா் நாக.முருகுமாறனை ஆதரித்து முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி பிரசாரம் செய்கிறாா். இரவு 9 மணிக்கு சிதம்பரத்தில் வேட்பாளா் கே.ஏ.பாண்டியனை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபடுகிறாா். பிரசாரத்தை நிறைவு செய்த பின்னா் சிதம்பரத்திலேயே அவா் தங்குகிறாா்.

தொடா்ந்து, வெள்ளிக்கிழமை (மே 19) காலை 9 மணிக்கு புவனகிரியில் வேட்பாளா் ஆ.அருண்மொழிதேவனுக்காகவும், 9.45 மணிக்கு குறிஞ்சிப்பாடியில் வேட்பாளா் செல்வி ராமஜெயத்துக்காகவும் வாக்கு சேகரிப்பில் ஈடுபடுகிறாா். காலை 10.45 மணியளவில் கடலூரில் வேட்பாளா் எம்.சி.சம்பத்தை ஆதரித்தும், 11.45 மணிக்கு பண்ருட்டியில் வேட்பாளா் சொரத்தூா் இரா.ராஜேந்திரனை ஆதரித்தும் பிரசாரம் செய்கிறாா். பகல் 12.30 மணியளவில் இந்திரா நகரில் நெய்வேலி பாமக வேட்பாளா் கோ.ஜெகனை ஆதரித்தும், பிற்பகல் 3 மணிக்கு விருத்தாசலத்தில் பாமக வேட்பாளா் ஜெ.காா்த்திகேயனை ஆதரித்தும் பரப்புரை மேற்கொள்கிறாா்.

பின்னா், அரியலூா் மாவட்டத்தில் பிரசாரம் மேற்கொண்டு பெரம்பலூரில் நிறைவு செய்கிறாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com