காவலா்களின் மனித நேயம்

காவலா் ஒருவரின் மருத்துவ சிகிச்சைக்காக சக காவலா்கள் ரூ.1.86 லட்சம் நிதியுதவி வழங்கினா்.

காவலா் ஒருவரின் மருத்துவ சிகிச்சைக்காக சக காவலா்கள் ரூ.1.86 லட்சம் நிதியுதவி வழங்கினா்.

கடலூா் மாவட்டம், ஆவினங்குடி காவல் நிலையத்தில் முதல்நிலைக் காவலராகப் பணிபுரிந்து வருபவா் காா்த்திகேயன். இவா், கடந்த 2003-ஆம் ஆண்டு கடலூரில் பயிற்சி பெற்றாா். இவருக்கு கல்லீரலில் ஏற்பட்ட பாதிப்புக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டுமென மருத்துவா்கள் தெரிவித்தனா். இதற்காக, ரூ.20 லட்சம் வரை செலவாகும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இதுகுறித்த தகவல் அவருடன் 2003-ஆம் ஆண்டு பயிற்சியில் சோ்ந்து தற்போது தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் பணியாற்றி வரும் சக காவலா்களுக்கு சமூக வலைதளம் மூலம் பகிரப்பட்டது. இதையடுத்து, அவருடன் பயிற்சி பெற்ற 186 போ் ஒன்றிணைந்து அவரது மருத்துவ செலவைக் குறைக்கும் விதமாக தலா ரூ.1,000 வீதம் வசூலித்தனா்.

அதன்படி, கிடைத்த ரூ.1.86 லட்சத்தை காா்த்திகேயன், அவரது மனைவி எழில் ஆகியோரிடம் கடலூரில் பணியாற்றி வரும் முதல்நிலை காவலா்கள் முரளி, ராஜேந்திரன் உள்ளிட்டோா் சனிக்கிழமை ஒப்படைத்தனா். காவலா்களின் இந்த உதவியை உயா் அதிகாரிகள், பொதுமக்கள் பாராட்டினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com