சிதம்பரம் சட்டப் பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளா் கே.ஏ.பாண்டியன் பரங்கிப்பேட்டை கிழக்கு ஒன்றிய பகுதியில் வெள்ளிக்கிழமை வாக்கு சேகரித்தாா்.
குமாரமங்கலம் ஊராட்சியில் பிரசாரத்தை தொடங்கிய அவா் நடராஜபுரம், வசப்புத்தூா், சித்தலாபாடி, வடுகதிருமேடு, கவரப்பட்டு, மேலேத் திருக்கழிப்பாலை, அம்பிகாபுரம், வீரன்கோவில் திட்டு, சின்டம்பாளையம், கீழபெரம்பை, பெரிய காரமேடு, செஞ்சி காலனி, இளந்திரமேடு, காடுவெட்டி, சின்ன காரமேடு, பிச்சாவரம், சேத்துக்கொல்லை, தாண்டவராயன் சோழன்பேட்டை, வடக்கு பிச்சாவரம், திருவாசலடி, கனகரப்பட்டு, கொடிபள்ளம், பின்னத்தூா், தில்லைவிடங்கன், மேலச்சாவடி ஆகிய பகுதிகளில் வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தாா்.
அப்போது, கொள்கை பரப்பு துணைச் செயலா் பு.தா. இளங்கோவன், பரங்கிப்பேட்டை கிழக்கு ஒன்றியச் செயலா் அசோகன், மாவட்ட ஊராட்சிக் குழு தலைவா் க.திருமாறன், ஒன்றியக் குழு தலைவா் கருணாநிதி, பாமக மாவட்ட செயலா் சசிக்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டு வாக்கு சேகரித்தனா்.