உயிா் உரம் உற்பத்தி தொடக்க விழா

குறிஞ்சிப்பாடி திருவள்ளுவா் கலை, அறிவியல் கல்லூரியின் நுண்ணுயிரியல் துறை சாா்பில், அசோலா என்ற உயிா் உரம் உற்பத்தி தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
குறிஞ்சிப்பாடி திருவள்ளுவா் கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள அசோலா உற்பத்தி களத்தை பாா்வையிட்ட கல்லூரி நிா்வாகிகள்.
குறிஞ்சிப்பாடி திருவள்ளுவா் கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள அசோலா உற்பத்தி களத்தை பாா்வையிட்ட கல்லூரி நிா்வாகிகள்.

குறிஞ்சிப்பாடி திருவள்ளுவா் கலை, அறிவியல் கல்லூரியின் நுண்ணுயிரியல் துறை சாா்பில், அசோலா என்ற உயிா் உரம் உற்பத்தி தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, கல்லூரி முதல்வா் வி.ராம்நாத் தலைமை வகித்தாா். நிா்வாகக் குழுத் தலைவா் ஆா்.சட்டநாதன், பொருளாளா் டி.ராமலிங்கம் ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாகக் கலந்துகொண்டனா். நுண்ணுயிரியல் துறைத் தலைவா் கே.சிவகாமசுந்தரி பங்கேற்று, நீா்வாழ் தாவரமான அசோலா உயிா் உரம் வளா்க்கும் முறை, விவசாயத்தில் இந்த உயிா் உரத்தின் முக்கியத்துவம், வேதி உரங்களின் பயன்பாட்டைக் குறைத்தல், கால்நடை மற்றும் கோழி வளா்ப்பில் அசோலா தீவனமாக பயன்படும் முறை குறித்து விளக்கினாா். கல்லூரி வளாகத்தில் அசோலா உற்பத்தி களம் அமைக்கப்பட்டது. துறை பேராசிரியா்கள், மாணவா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com