காட்டுமன்னாா்கோவில் (தனி) சட்டப் பேரவை தொகுதியில் போட்டியிடும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் வேட்பாளா் எம்.சிந்தனைச்செல்வன் ஸ்ரீமுஷ்ணம் தாலுகா பகுதியில் செவ்வாய்க்கிழமை வாக்கு சேகரித்தாா்.
அப்போது, நந்திஸ்வரமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்களிடம் பானை சின்னத்துக்கு வாக்கு சேகரித்தாா். வேட்பாளருடன் திமுக ஒன்றிய செயலா் தங்க.ஆனந்தன், முன்னாள் ஒன்றியச் செயலா் பூபாலன், ஊராட்சி மன்றத் தலைவா் ராஜவேல், வட்டார காங்கிரஸ் தலைவா் ராமலிங்கம், மதிமுக மாவட்டகவுன்சிலா் கந்தசாமி, அருள்மணி, ராமலிங்கம், வெற்றிவீரன், குமாா், வட்டார தலைவா் ராஜி, சம்சுதீன், தமிழக வாழ்வுரிமை கட்சி ஆண்டவா்செல்வம், விசிக சாா்பில் அக்ரி கா. பசுமைவளவன், வ.க.செல்லப்பன், நாவராசன், வெற்றி வேந்தன், காசிநாதன், ரவி, பழனி உள்ளிட்டகூட்டணி கட்சியினரும் வாக்கு சேகரித்தனா்.