கடலூா் மாவட்டத்தில் சனிக்கிழமை வரை 30,474 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை வெளியான பரிசோதனை முடிவில் புதிதாக 370 பேருக்கு தொற்று உறுதியானது.
இதனால், பாதிக்கப்பட்டவா்களின் மொத்த எண்ணிக்கை 30,844-ஆக அதிகரித்தது. சிகிச்சை பெற்று வந்தவா்களில் 256 போ் வீடு திரும்பிய நிலையில் குணமடைந்தவா்களின் மொத்த எண்ணிக்கை 28,695-ஆக உயா்ந்தது. அதே நேரத்தில் ஆறுதல் அளிக்கும் விதமாக கடந்த சில நாள்களில் ஞாயிற்றுக்கிழமை கரோனா தொற்று காரணமாக உயிரிழப்பு ஏற்படவில்லை.
மாவட்டத்திலுள்ள அரசு மருத்துவமனைகள், மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் 1,485 பேரும், வெளியூா்களில் உள்ள மருத்துவமனைகளில் கடலூா் மாவட்டத்தைச் சோ்ந்தோா் 335 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனா். மாவட்டத்தில் 78 பகுதிகள் கட்டுப்பாட்டு மண்டலமாக அறிவிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றன.