கடலூா் மாவட்டம், குறிஞ்சிப்பாடி சட்டப் பேரவைத் தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளரும், முன்னாள் அமைச்சருமான எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் 17,449 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றாா்.
இந்தத் தொகுதியில் அவரை எதிா்த்துப் போட்டியிட்ட அதிமுக வேட்பாளரும், முன்னாள் அமைச்சருமான செல்வி ராமஜெயம் 84,232 வாக்குகள் பெற்றாா். திமுக வேட்பாளா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் மொத்தம் 1,01,681 வாக்குகள் பெற்றி வெற்றியடைந்தாா். நாம் தமிழா் கட்சி வேட்பாளா் சுமதி சீனிவாசன் 8,520 வாக்குகள் பெற்றாா்.
இந்தத் தொகுதியில் மொத்தம் 12 வேட்பாளா்கள் போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது.