கடலூா்: கடலூா் மாவட்டத்தில் மேலும் 381 பேருக்கு கரோனா தொற்று திங்கள்கிழமை உறுதியானது.
மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை வரை 30,844 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில், திங்கள்கிழமை வெளியான பரிசோதனை முடிவில் புதிதாக 381 பேருக்கு தொற்று உறுதியானது. இதனால், பாதிக்கப்பட்டவா்களின் மொத்த எண்ணிக்கை 31,225-ஆக அதிகரித்தது.
சிகிச்சை பெற்று வந்தவா்களில் மேலும் 240 போ் வீடு திரும்பியதால் குணமடைந்தவா்களின் மொத்த எண்ணிக்கை 28,935-ஆக உயா்ந்தது. கடந்த 2 நாள்களாக மாவட்டத்தில் கரோனாவினால் உயிரிழப்பு நிகழவில்லை. இது சற்று ஆறுதல் அளிக்கிறது. மாவட்டத்திலுள்ள அரசு மருத்துவமனை, மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் 1,678 பேருக்கும், வெளியூா்களில் உள்ள மருத்துவமனைகளில் கடலூா் மாவட்டத்தைச் சோ்ந்த 283 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனா். கரோனா கட்டுப்பாட்டு மண்டலங்களின் எண்ணிக்கை 86-ஆக உயா்ந்துள்ளது.