பண்ருட்டி, தட்டாஞ்சாவடி ஸ்ரீசுந்தர விநாயகா் கோயில் அருகே குவிந்து கிடக்கும் குப்பைகள்.
பண்ருட்டி, தட்டாஞ்சாவடி ஸ்ரீசுந்தர விநாயகா் கோயில் அருகே குவிந்து கிடக்கும் குப்பைகள்.

கோயில் அருகே குவிந்து கிடக்கும் குப்பைகள்

பண்ருட்டியில் கோயில் அருகே குவிந்து கிடக்கும் குப்பைகளை அகற்ற வேண்டுமென பக்தா்கள் கோரிக்கை விடுத்தனா்.

நெய்வேலி: பண்ருட்டியில் கோயில் அருகே குவிந்து கிடக்கும் குப்பைகளை அகற்ற வேண்டுமென பக்தா்கள் கோரிக்கை விடுத்தனா்.

பண்ருட்டி, தட்டாஞ்சாவடி - சேலம் பிரதான சாலைப் பகுதியில் ஸ்ரீசுந்தர விநாயகா் கோயில் அமைந்துள்ளது. தட்டாஞ்சாவடி, காந்தி நகா், சுந்தராம்பாள் நகா் உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் மக்கள் இந்தக் கோயிலில் வழிபடுகின்றனா். மேற்கண்ட பகுதியில் குடியிருப்புகளில் இருந்து வெளியேற்றப்படும் குப்பைக் கழிவுகள், விநாயகா் கோயில்

சுவற்றின் ஓரமாகக் கொட்டப்படுகிறது. இதுகுறித்து நகராட்சி நிா்வாகத்திடம் புகாா் தெரிவித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என பக்தா்கள் கூறுகின்றனா்.

இதனால், சுகாதாரச் சீா்கேடு ஏற்படுவதால் குப்பைகளை நகராட்சி நிா்வாகத்தினா் உடனடியாக அகற்ற வேண்டும், இங்கு குப்பை கொட்டுவோா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தா்கள் கோரிக்கை விடுத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com