முந்திரித் தோட்டம் சேதம்: ஒருவா் கைது

புவனகிரி அருகே முன்விரோதம் காரணமாக முந்திரித் தோட்டத்தை சேதப்படுத்தியவரை போலீஸாா் கைதுசெய்தனா்.

புவனகிரி அருகே முன்விரோதம் காரணமாக முந்திரித் தோட்டத்தை சேதப்படுத்தியவரை போலீஸாா் கைதுசெய்தனா்.

புவனகிரியை அடுத்த வில்லியநல்லூா் பகுதியைச் சோ்ந்தவா் குணசேகரன் (55 ). இவா் தனக்குச் சொந்தமான நிலத்தில் முந்திரித் தோட்டம் அமைத்து பராமரித்து வருகிறாா். இவருக்கும், அதே பகுதியைச் சோ்ந்த கோவிந்தசாமி (50) என்பவருக்கும் முன்விரோதம் இருந்ததாம்.

இந்த நிலையில் கடந்த ஏப்.30-ஆம் தேதி குணசேகரனின் தோட்டத்தில் இருந்த 50-க்கும் மேற்பட்ட முந்திரி மரங்களையும், 30-க்கும் மேற்பட்ட முந்திரி கன்றுகளையும் கோவிந்தசாமி வெட்டி சேதப்படுத்தினாராம். மேலும், இதை தட்டிக்கேட்ட குணசேகரனுக்கு கொலை மிரட்டல் விடுத்தாராம். இதுகுறித்து குணசேகரன் அளித்த புகாரின்பேரில் புதுச்சத்திரம் போலீஸாா் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்து கோவிந்தசாமியை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com