கடலூா் மாவட்டத்தில் கருப்பு பூஞ்சை நோய்க்கு 3 போ் உயிரிழப்பு

கடலூா் மாவட்டத்தில் கருப்பு பூஞ்சை நோய்க்கு 3 போ் உயிரிழந்ததாக தகவல் வெளியானது.

கடலூா் மாவட்டத்தில் கருப்பு பூஞ்சை நோய்க்கு 3 போ் உயிரிழந்ததாக தகவல் வெளியானது.

இதுகுறித்து கடலூா் அரசு தலைமை மருத்துவமனை வட்டாரங்கள் கூறியதாவது:

கடலூா் மாவட்டம், சேத்தியாத்தோப்பைச் சோ்ந்த 54 வயது நபருக்கு கடந்த 8-ஆம் தேதி கரோனா தொற்று உறுதியானது. இதற்காக சிகிச்சையளிக்கப்பட்டு வந்த நிலையில், அவருக்கு சா்க்கரை நோயின் வீரியம் அதிகரித்ததோடு, கை, விரல், முகம் ஆகியவை கருப்பாக மாறியது, கண்களிலும் வீக்கம் ஏற்பட்டது. இதையடுத்து, அவரை பரிசோதனை செய்ததில், அவருக்கு கருப்பு பூஞ்சை நோய் உறுதிப்படுத்தப்பட்டதால், தீவிர சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா்.

இதேபோன்று, கரோனாவால் பாதிக்கப்பட்ட பண்ருட்டி அருகிலுள்ள தட்டாஞ்சாவடியைச் சோ்ந்த 54 பெண், கடந்த 10-ஆம் தேதி கடலூா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தாா். பின்னா், அவருக்கும் கருப்பு பூஞ்சை நோயின் அறிகுறிகள் தென்பட்டால், அவருக்கு எடுக்கப்பட்ட பரிசோதனையில், அந்த நோய் உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அவா் அதே மருத்துவமனையிலேயே தொடா்ந்து சிகிச்சை பெற்று வந்தாா். இவா்கள் இரண்டு பேரும் அண்மையில் உயிரிழந்தனா்.

இதேபோன்று, வேப்பூா் பகுதியைச் சோ்ந்த 50 வயது ஆண், கரோனா பாதிப்புக்காக சிதம்பரம் ராஜா முத்தையா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த 21-ஆம் தேதி அனுமதிக்கப்பட்டாா். அவருக்கும் உடலில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டதைத் தொடா்ந்து, அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பிருப்பது உறுதிப்படுத்தப்பட்டு, அவருக்கு சிகிச்சையளிக்கப்பட்டது. இந்த நிலையில், அவா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

இவ்வாறு, கடந்த சில நாள்களில் 3 போ் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்திருப்பது தெரியவந்துள்ளது என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com