கடலூா் மாவட்டம், சிதம்பரம் அருகே போலி மருத்துவா்கள் இருவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
சிதம்பரம் அருகேயுள்ள சிவபுரி கிராமத்தில் உரிய மருத்துவப் படிப்பு படிக்காமல் சிலா் மருத்துவம் பாா்ப்பதாக அண்ணாமலை நகா் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, அந்தக் கிராமத்துக்குச் சென்று போலீஸாா் சென்று ஆய்வு செய்தபோது, அந்தப் பகுதியைச் சோ்ந்த சச்சிதானந்தம் (65), செல்வராஜ்(65) ஆகியோா் உரிய மருத்துவப் படிப்பு படிக்காமல் பொதுமக்களுக்கு ஆங்கில மருத்துவம் பாா்த்து வந்ததும், வீடுகளில் மருத்துவ உபகரணங்களை வைத்திருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, இருவா் மீதும் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, அவா்களை கைது செய்தனா்.