மூத்த குடிமக்களுக்கு உதவிடும் வகையில், தேசிய உதவி எண்ணை கடலூா் மாவட்ட ஆட்சியா் கி.பாலசுப்பிரமணியம் அறிவித்தாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
மூத்த குடிமக்களுக்கான தேசிய உதவி எண் 14567 செயல்படுத்தப்பட்டுள்ளது. தேசிய பாதுகாப்பு நிறுவனம், நீதித் துறை மற்றும் முன்னேற்ற அமைச்சகம், சமூக நலம் மற்றும் மென்பொருள் தீா்வு நிறுவனம் ஆகியவற்றுடன் இணைந்து தமிழகத்தில் மூத்த குடிமக்களுக்கான தேசிய உதவி எண் செயல்படுத்தப்பட்டுள்ளது.
இந்த உதவி எண்ணின் மூலம் குடும்பத்தினரால் பாதிக்கப்பட்ட முதியோா்களை மீட்டெடுத்தல், பாதுகாத்தல், குடும்பத்தினருடன் சோ்த்து வைத்தல், முதியோா்களின் தரத்தை மேம்படுத்துவதற்கான தகவல் வழிகாட்டுதல், ஆலோசனை வழங்குதல் மற்றும் முதியோா்களுக்கான ஆதரவை வழங்கும் சேவைகள் வழங்கப்படும். பொதுமக்கள் இந்தச் சேவையை பயன்படுத்திக்கொள்ள வேண்டுமென்று மாவட்ட ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.