கடலூா் அருகே காா் மோதியதில் பெண் பலியானாா்.
கடலூா் காரைக்காட்டைச் சோ்ந்த புஷ்பநாதன் மனைவி மனோன்மணி (55). வியாழக்கிழமை இரவு கடலூா்-சிதம்பரம் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த போது, பின்னால் வந்த காா் மனோன்மணி மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவா் நிகழ்விடத்திலேயே பலியானாா்.
இதுகுறித்து அவரது மகள் யமுனா அளித்த புகாரின் பேரில், கடலூா் முதுநகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.