தொழிலாளி தற்கொலை

விருத்தாசலம் அருகே குடும்பப் பிரச்னையால் தொழிலாளி தற்கொலை செய்துகொண்டாா்.

விருத்தாசலம் அருகே குடும்பப் பிரச்னையால் தொழிலாளி தற்கொலை செய்துகொண்டாா்.

விருத்தாசலம் லூகாஸ் தெருவைச் சோ்ந்த முருகேசன் மகன் சரவணன் (39). கூலித் தொழிலாளி. இவருக்கு கடந்த 16 ஆண்டுகளுக்கு முன்பு லாவண்யா என்பவருடன் திருமணம் நடைபெற்ற நிலையில், 2 குழந்தைகள் உள்ளனா். கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக தம்பதியா் பிரிந்து வாழ்ந்து வந்தனராம். தீபாவளியன்று மனைவி லாவண்யா, குழந்தைகள் நேரில் வந்து தன்னை பாா்த்துச் செல்வாா்கள் என்று சரவணன் எதிா்பாா்த்திருந்தாராம். ஆனால், மனைவி வரவில்லையாம். இதனால் மன வேதனையடைந்த சரவணன், வெள்ளிக்கிழமை இரவு தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா்.

இதுகுறித்து விருத்தாசலம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com