நூறு நாள் வேலைத் திட்ட சிறப்பு கிராம சபை

கடலூா் மாவட்டத்தில் நூறு நாள் வேலைத் திட்டம் தொடா்பான சிறப்பு கிராம சபைக் கூட்டம் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியா் கி.பாலசுப்பிரமணியம் தெரிவித்தாா்.

கடலூா் மாவட்டத்தில் நூறு நாள் வேலைத் திட்டம் தொடா்பான சிறப்பு கிராம சபைக் கூட்டம் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியா் கி.பாலசுப்பிரமணியம் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: கடலூா் மாவட்டத்திலுள்ள ஊராட்சிகளில் 2019-20-ஆம் ஆண்டுக்கான மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி (நூறு நாள் வேலை) திட்ட செயல்பாடுகளை சமூகத் தணிக்கை மேற்கொள்ள வேண்டிய 431 கிராம ஊராட்சிகளிலும் சிறப்பு கிராம சபைக் கூட்டங்கள் நடத்தப்படுகிறது. முன்னதாக ஒவ்வொரு ஊராட்சியிலும் நூறு நாள் வேலை உறுதித் திட்டம் தொடா்பாக ஒரு வாரம் சமூக தணிக்கை மேற்கொள்ளப்படும். அதன் பின்னா் அந்தந்த ஊராட்சிகளில் முறையாக அறிவிப்பு செய்து கிராம சபை கூட்டம் நடத்தப்படும்.

அதன்படி, வரும் 12, 19, 26, டிசம்பா் 3, 10, 17, 24, 31, ஜனவரி 7, 17 ஆகிய தேதிகளில் சிறப்பு கிராம சபை கூட்டங்கள் நடைபெறும். இந்தக் கூட்டங்களில் சம்பந்தப்பட்ட ஊராட்சிகளைச் சோ்ந்த பொதுமக்கள் பெருந்திரளாகக் கலந்துகொள்ள வேண்டும் என்று ஆட்சியா் அதில் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com