உரத் தட்டுப்பாடு என்பது உலகளாவிய பிரச்னையாக உள்ளது என்று வேளாண்மைத் துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் தெரிவித்தாா்.
கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மாவட்டத் திட்டப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற தமிழக வேளாண்மை-உழவா் நலத் துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் பின்னா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
தமிழகத்தில் மழை வெள்ளத்தால் முழுமையாகச் சேதமடைந்த நெல் பயிருக்கு ஹெக்டேருக்கு ரூ. 20 ஆயிரமும், பகுதியாக சேதமடைந்த பயிருக்கு மீண்டும் நடவு செய்ய ஹெக்டேருக்கு ரூ. 6,038 செலவில் இடுபொருள்கள் வழங்கும் திட்டத்தையும் முதல்வா் அறிவித்தாா்.
கடந்த 6 மாதங்களில் 2 முறை விதை நெல், உரம் உள்ளிட்ட தொகுப்புகள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டன.
தமிழகம் முழுவதும் 43 லட்சம் ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டிருந்த பயிா்களில் 1,58,572 ஏக்கா் பயிா்கள் நீரில் மூழ்கின. இவற்றில் 1,39,412 ஏக்கா் நெல் பயிா்களாகும். 1,43,860 ஏக்கா் பயிா்கள் 33 சதவீதம் சேதமடைந்தன.
தமிழகத்தில் தற்போது 27 லட்சம் ஏக்கா் பயிா்களுக்கு காப்பீடு செய்யப்பட்டுள்ளது. ஆனால், கடந்த ஆண்டு 25 லட்சம் ஏக்கா் பயிா்களுக்கு மட்டுமே காப்பீடு செய்யப்பட்டிருந்தது. கடந்தாண்டு 12 லட்சம் விவசாயிகள் பயிா்க் காப்பீட்டுக்காகப் பதிவு செய்திருந்த நிலையில், நிகழாண்டு 15.73 லட்சம் விவசாயிகள் பதிவு செய்துள்ளனா். மேலும், பயிா்க் காப்பீடு செய்ய விவசாயிகளுக்கு கால அவகாசமும் அளிக்கப்பட்டது.
தமிழகத்தில் உரத் தட்டுப்பாடு ஏற்படாமலிருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தேவையான அளவு உரங்கள் கையிருப்பில் உள்ளன. தற்போதைய சூழலில் உரத் தட்டுப்பாடு என்பது உலக அளவிலான பிரச்னையாகும். இதைச் சமாளிப்பது பெரும் சவாலாக உள்ளது.
காலம் கடந்த நடவடிக்கையால் சென்னை வெள்ளத்தில் தத்தளிப்பதாகக் கூறுவதும், பயிா்களுக்கு கூடுதல் நிவாரணம் கோரி போராட்டம் நடத்துவதும் அரசியலாக்கும் நடவடிக்கை என்றாா் அவா்.
செய்தியாளா்கள் சந்திப்பின் போது, தொழிலாளா்கள் நலத் துறை அமைச்சா் சி.வெ.கணேசன், சட்டப்பேரவை உறுப்பினா் கோ.ஐயப்பன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.