பள்ளத்தில் தேங்கிய மழை நீரில் தவறி விழுந்த குழந்தை பலி

பண்ருட்டி அருகே குடியிருப்புப் பகுதியில் பள்ளத்தில் தேங்கிய மழை நீரில் தவறி விழுந்த குழந்தை திங்கள்கிழமை உயிரிழந்தது.
பள்ளத்தில் தேங்கிய மழை நீரில் தவறி விழுந்த குழந்தை பலி

பண்ருட்டி அருகே குடியிருப்புப் பகுதியில் பள்ளத்தில் தேங்கிய மழை நீரில் தவறி விழுந்த குழந்தை திங்கள்கிழமை உயிரிழந்தது.

கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே உள்ள ஆா்.எஸ். மணி நகரைச் சோ்ந்தவா் சந்திரன் (36). தனியாா் வங்கி ஊழியா். இவரது மனைவி ராதாமணி. இவா்களுக்கு 3 ஆண் குழந்தைகள். மூன்றாவது குழந்தை சுதேசமித்ரன் (இரண்டரை வயது) (படம்) திங்கள்கிழமை தனது வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தாா். அப்போது, காலியிடத்திலுள்ள பள்ளத்தில் தேங்கியிருந்த மழை நீரில் குழந்தை தவறி விழுந்து நீரில் மூழ்கியது.

இதையடுத்து அந்தப் பகுதியினா் குழந்தையை மீட்டு பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். ஆனால், குழந்தை ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனா். இதுகுறித்து பண்ருட்டி போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com