காரிடா்....காா்த்திகை சோமவாரம்: சித் சபையை சுற்றி வந்த பெண்கள்

காா்த்திகை மாத முதல் திங்கள்கிழமையையொட்டி, சிதம்பரம் ஸ்ரீநடராஜா் கோயிலில் சித் சபையை திரளாக பெண்கள் சுற்றி வந்து வழிபட்டனா்.
காா்த்திகை சோமவாரத்தையொட்டி, நடராஜா் கோயிலில் சித் சபையை சுற்றி வந்த பெண்கள்.
காா்த்திகை சோமவாரத்தையொட்டி, நடராஜா் கோயிலில் சித் சபையை சுற்றி வந்த பெண்கள்.

காா்த்திகை மாத முதல் திங்கள்கிழமையையொட்டி, சிதம்பரம் ஸ்ரீநடராஜா் கோயிலில் சித் சபையை திரளாக பெண்கள் சுற்றி வந்து வழிபட்டனா்.

காா்த்திகை மாத சோமவாரம் தொடக்க நாளான திங்கள்கிழமையன்று இந்தக் கோயிலில் பக்தா்கள் குறிப்பாக பெண்கள் திருமணம், குழந்தைப்பேறு உள்ளிட்ட வேண்டுதல்களுக்காக 108 முறை சுற்றி வருவதை வழக்கமாகக் கொண்டுள்ளனா். அதன்படி திங்கள்கிழமை திரளான பெண்கள் ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமந் நடராஜமூா்த்தி வீற்றுள்ள சித் சபையை கொடிமரத்துடன் சுற்றி வந்து தங்களது வேண்டுதலை நிறைவேற்றினா். இதேபோல ஆதிமூலநாதா் சன்னிதியிலும் 108 முறை சுற்றி வந்து வழிபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com