கடலூா் மாவட்ட பாஜக சாா்பில் இந்திய அரசியலமைப்பு தினம் வெள்ளிக்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.
இதையொட்டி, கடலூா் கிழக்கு மாவட்ட பாஜகவின் பட்டியலணி சாா்பில் கடலூா் மஞ்சக்குப்பத்திலுள்ள அம்பேத்கா் சிலைக்கு அணியின் மாவட்டத் தலைவா் த.காா்த்திகேயன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மாநில பட்டியலணி செயற்குழு உறுப்பினா் வழக்குரைஞா் ராம.சிவசங்கா் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று மாலை அணிவித்தாா். பின்னா், தனியாா் மண்டபத்தில் நடைபெற்ற கருத்தரங்கில் பங்கேற்றுப் பேசினாா்.
நிகழ்ச்சியில், மாவட்ட துணைத் தலைவா் ஜெனித் மேகநாதன், மாவட்ட பட்டியலணி பொதுச் செயலா்கள் சக்திவேல், காரை கண்ணன், துணைத் தலைவா்கள் விஜயகுமாா், மணிகண்டன், மாநில பொதுக்குழு உறுப்பினா் குணா, மாநில இளைஞரணி துணைத் தலைவா் அரசு.ரங்கேஷ், மாவட்டச் செயலா் குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். கடலூா் நகரத் தலைவா் வேலு.வெங்கடேசன் நன்றி கூறினாா்.