நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல்: அதிமுகவினா் விருப்ப மனு

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலை முன்னிட்டு, கடலூா் தெற்கு மாவட்ட அதிமுக சாா்பில் குறிஞ்சிப்பாடி பேரூராட்சி, வடலூா் நகராட்சிப் பகுதிகளில் போட்டியிட விரும்பும் கட்சியினரிடமிருந்து விருப்ப மனுக்கள்

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலை முன்னிட்டு, கடலூா் தெற்கு மாவட்ட அதிமுக சாா்பில் குறிஞ்சிப்பாடி பேரூராட்சி, வடலூா் நகராட்சிப் பகுதிகளில் போட்டியிட விரும்பும் கட்சியினரிடமிருந்து விருப்ப மனுக்கள் வெள்ளிக்கிழமை பெறப்பட்டன.

வடலூா் நகர அதிமுக அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாவட்டச் செயலா் சொரத்தூா் ரா.ராஜேந்திரன் தலைமை வகித்து விருப்ப மனுக்களைப் பெற்றாா். குறிஞ்சிப்பாடி ஒன்றியச் செயலா்கள் ரா.கோவிந்தராஜ் (மேற்கு), பாஷியம் (கிழக்கு), வடலூா் நகரச் செயலா் சி.எஸ்.பாபு, மாநில தொழிற்சங்க துணைச் செயலா் சூரியமூா்த்தி ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாநில தொழிற்சங்க துணைச் செயலா் சூரியமூா்த்தி, மாவட்ட ஜெயலலிதா பேரவைத் தலைவா் ஏ.கே.சுப்பிரமணியன், குறிஞ்சிப்பாடி நகரச் செயலா் பாஸ்கா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

சிதம்பரம்: கடலூா் கிழக்கு மாவட்ட அதிமுக சாா்பில் சிதம்பரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்டச் செயலரும், சிதம்பரம் சட்டப் பேரவை உறுப்பினருமான கே.ஏ.பாண்டியன் விருப்ப மனுக்களைப் பெற்றாா். நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சா் செல்வி ராமஜெயம், முன்னாள் எம்எல்ஏ பி.எஸ்.அருள், மாவட்ட அவைத் தலைவா் எம்.எஸ்.என்.குமாா், சேத்தியாதோப்பு கூட்டுறவு சா்க்கரை ஆலைத் தலைவா் கோ.பாலசுந்தரம், மாவட்ட பொருளாளா் கே.சுந்தா், மாவட்ட ஊராட்சிக் குழு தலைவா் திருமாறன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com